Sasirekha

Sasirekha

என் வாழ்வே உன்னோடுதான் - சசிரேகா

முன்னுரை

யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.

திருட்டு பழியிலிருந்து தன் கணவனை  மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும். 

 

கலாபக் காதலா - சசிரேகா

முன்னுரை

இருவேறு குணங்கள் கொண்ட இருவருக்குள் ஏற்படும் திடீர் பரிச்சயமும் அதில் உருவான நட்பும், நட்பில் தொடங்கி உருவான காதல், காதலால் ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் இறுதியில் அவர்களின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே இக்கதையாகும். 

 

உன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா

முன்னுரை

இக்கதையின் நாயகன் தவறுதலாக மணமேடை மாறி அமர்ந்ததால் யாரென்றே தெரியாத நாயகியுடன் திருமணம் முடிந்த நிலையில் அப்போது அந்த இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நாயகி காணாமல் போய்விட எப்படி நாயகன் நாயகியை தேடிப்பிடிக்கிறான்?

நாயகியிடம் உண்மையைச் சொல்லும் நாயகனை எவ்வாறு நம்புகிறாள் நாயகி??

நாயகியின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து அவளது காதலையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கப் போராடும் கதாநாயகன் இறுதியில் வாழ்க்கையில் ஜெயித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

தாமரை மேலே நீர்த்துளி போல் - சசிரேகா

முன்னுரை

எதிர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும். 

இது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும். இக்கதையில் வரும் மாந்தர்கள் யாரும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

 

 இளகி இணையும் இரு இதயங்கள் - சசிரேகா - சசிரேகா

முன்னரை

இருமாறுப்பட்ட எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும் தங்களது விருப்பங்களை விட்டுக் கொடுக்காமல் காதலித்து அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் போராடி பல பிரச்சனைக்களுக்குப் பிறகு அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்.