Online Books / Novels Tagged : Historical - Chillzee KiMo

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.

 

Published in Books

கஜகேசரி - சசிரேகா

முன்னுரை

குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது.

இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன்.

இக்கதை முற்றிலும் கற்பனையே.

Published in Books
Page 1 of 2