முன்னுரை
யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.
திருட்டு பழியிலிருந்து தன் கணவனை மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும்.
நெருப்பில் கரையும் பனித்துளிகள் திருமணமாகாத ஒரு இளம்பெண் தவறு இழைத்ததால் அவள் குடும்பமே நசிந்து போனதைப் பற்றிப் பேசுகிறது.
தன் தங்கையை ஏமாற்றியக் கயவன் பணக்காரன் என்பதால் அவனைப் பழி வாங்க அண்ணன் குமாரும் அவனது நண்பன் ஆனந்தும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். எப்படியாவது தங்கையை ஏமாற்றியவனின் கம்பெனியை விலைக்கு வாங்கி அவனை நடு ரோட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே குமாரின் லட்சியம் கனவு எல்லாமே!
அதில் அவன் வெற்றி கண்டானா? அவனது பழிக்கு ஆளான தினேஷ் என்னவானான்? குமாருக்குக் காதல் வருமா?
இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.
விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டிருக்கிறது "நெருப்பில் கரையும் பனித்துளிகள்" என்ற இந்த நாவல்.
முன்னுரை
இக்கதையின் நாயகன் தவறுதலாக மணமேடை மாறி அமர்ந்ததால் யாரென்றே தெரியாத நாயகியுடன் திருமணம் முடிந்த நிலையில் அப்போது அந்த இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நாயகி காணாமல் போய்விட எப்படி நாயகன் நாயகியை தேடிப்பிடிக்கிறான்?
நாயகியிடம் உண்மையைச் சொல்லும் நாயகனை எவ்வாறு நம்புகிறாள் நாயகி??
நாயகியின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து அவளது காதலையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கப் போராடும் கதாநாயகன் இறுதியில் வாழ்க்கையில் ஜெயித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.