Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

எனது நிலா கண்ணிலே! - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

Published in Books

மலருக்குத் தென்றல் பகையானால்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

டீனேஜ் எனப்படும் பதின் பருவம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சோதனையான காலம். அந்த நேரத்தில் தான் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும்? எனச் சொல்கிறது எனது அடுத்த நாவலான "மலருக்குத் தென்றல் பகையானால்...".

தனுஜா பள்ளியில் படிக்கும் இளம் பெண். அவளது வீட்டின் நிலை ஏன் சரியில்லை? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் யோசித்துக் குழம்பி, வெளியில் ஆறுதல் தேடுகிறாள். தோழி மீரா கூடப் பகையாகத் தெரிகிறாள் ஒரு கட்டத்தில். தனுஜாவின் அந்த நிலையைப் பயன் படுத்தப் பார்க்கிறான் ஒரு கயவன்.

இறுதியில் தனுஜா என்ன ஆனாள்? அவளது எதிர்காலம் என்ன ஆகும்? அவளது தாய் தனது தவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து கொண்டாளா?

இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளப் படியுங்கள் புதிய நாவல் "மலருக்குத் தென்றல் பகையானால்.." உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

 

Published in Books

தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!


********

Published in Books

கண் வாசல் கனவுகள் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

Published in Books

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - பிந்து வினோத்

எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!

35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.

 

அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!

முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.

 

ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?

 

நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.

யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?

 

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!

Published in Books