Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

நெஞ்சினிலே நெஞ்சினிலே - சசிரேகா

முன்னுரை

வழிதவறி வந்த நாயகிக்கு அடைக்கலம் தரும் நாயகன் அவளின் அன்பை சம்பாதிக்க போராடுகிறான்.

இதில் நாயகிக்காக அவளின் குடும்பத்தார் வைக்கும் போட்டியில் கலந்துக் கொள்கிறான்.

பல பிரச்சனைகளை கடந்து அவன் போட்டியில் ஜெயித்தானா நாயகியின் கரத்தை பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

நிலவே நீ சாட்சி... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நிலவே நீ சாட்சி...என்னும் இந்த நாவல் அருணா என்னும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.

அவளது வாழ்வில் எல்லாமே இருந்தும் தாய் இல்லை என்ற குறை அவளை வாட்டுகிறது. அத்தையும் மாமாவும் ஏன் அவளது தகப்பனுமே அவளது தாயைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என எதுவுமே தெரியவில்லை அருணாவுக்கும் அவளது தம்பி விஜய்க்கும். அருணாவுக்குக் காதலும் வர அதனைக் கொண்டாடுகிறாள். ஆனால்?

காதலன் சிவா வீட்டில் தாயறியாத பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தந்தையிடமிருந்து எப்படியாவது தாயைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என பெரும் முயற்சி செய்கிறார்கள் தமக்கையும் தம்பியும். மாமனும் அத்தையும் வில்லங்களாக மாற அவர்களைக் கூட தூக்கியெறியத் துணிகிறார்கள்.

அவர்களது தாய் யாரெனத் தெரிந்ததா? தாயன்பு அவர்களுக்குக் கிடைத்ததா? காதல் கை கூடியதா?

அருணாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.."நிலவே நீ சாட்சி...".

Published in Books

கஜகேசரி - சசிரேகா

முன்னுரை

குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது.

இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன்.

இக்கதை முற்றிலும் கற்பனையே.

Published in Books

எதிர் எதிரே நீயும் நானும் - பிரேமா சுப்பையா

பிரேமா சுப்பையாவின் புதிய நாவல்.

 

Published in Books

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

Published in Books