Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

காதலடி நீயெனக்கு!! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

எனது முந்தைய கதைகளான உன்னை விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய் ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எனது கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

Published in Books

வேறென்ன வேண்டும் உலகத்திலே - பிந்து வினோத்

Second edition!!!!!

இரண்டாம் பதிப்பு.

முதல் பதிப்பில் இருந்து பல மாற்றங்கள் மற்றும் பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி!!

 

சாதனா, சஹானா எனும் இரு சகோதரிகளை சுற்றி வலம் வரும் கதை இது.

இருவரும் தங்கள் வாழ்வில் பூக்கும் காதலையும், அது தொடர்பான சச்சரவுகளையும் எப்படி எதிர் கொண்டு வெல்கிறார்கள் என்பதை சுற்றி நகரும் கதை.

 

Published in Books

ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - பாகம் - 1 - பிந்து வினோத்

பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து, புதிதாய் ஒரு பந்தத்தை கொடுக்கும் திருமணம், எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் தான்!

அப்படி சாதாரண சந்திப்பில் தொடங்கி, காதலாக மாற்றம் கொண்டு, கல்யாணத்தில் இணைந்து, குடும்பமாய் தொடரும் மஞ்சு - மனோஜின் கதையின் முதல் பாகம் இது. 

நாவலின் இரண்டாம் பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். இந்த முதல் பாகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

Published in Books

காதல் தெய்வீக ராணி - சசிரேகா

முன்னுரை
பார்த்த உடனே தோன்றும் காதல், பார்க்காமலே தோன்றும் காதல், பார்த்து பழகி உருவாகும் காதல், நட்பில் இருந்து தோன்றும் காதல், புரிதலால் உருவான காதல், உறவின் அடிப்படையில் உருவான காதல், திருமணத்திற்கு பின்பு வரும் காதல் இவை எல்லாம் கடந்து மானசீகமாக ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தால் அது எப்படியிருக்கும் அந்த மானசீக காதல் ஜெயிக்க அந்த பெண் போராடும் போராட்டமே இக்கதையின் கருவாகும்.  

 

Published in Books