Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

காதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா

முன்னுரை

வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது. அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான்.

இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை

 

Published in Books

தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!


********

Published in Books

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - பிந்து வினோத்

எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!

35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.

 

அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!

முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.

 

ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?

 

நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.

யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?

 

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!

Published in Books