இது 'உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்...' நாவலின் இரண்டாம் பதிப்பு.
முதல் பதிப்பில் இருந்து பல விதமான மாற்றங்கள் மற்றும் பல பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி!!
கதையைப் பற்றி:
மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.
சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.
சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.
ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??
தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!