முன்னுரை:
அனைவருக்கும் வணக்கம்..
இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் சில்சீ நட்பூக்களுக்கு நன்றி..
தொடர் கதையோடு நாவல் எழுதும் வகையில் அடுத்ததாக கண்டேன் என் காதலை என்ற எனது இரண்டாவது நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
கதையை பற்றி??
காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை..
இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் கதையின் போக்கு.. இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்...
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!
கண்கள் சொல்கின்ற கவிதை என்பது முற்றிலும் புதிய தளத்தில் சொல்லப்பட்ட காதல் கதை.
அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதல் மனதில் பூத்திருக்கும். அதனை நினைவு படுத்தும் இந்தக் கதை.
காதல் ஒருவனை அழிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பல கதைகளிலிருந்து சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் காதல் ஒருவனை எந்த அளவு உயர்த்தியது என்பதே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படி உயர்த்திய காதலியின் நிலை என்ன?
அவன் நிலை உயர்ந்ததும் காதல் என்ன ஆனது? வீட்டாரின் எண்ணங்கள் மாறினவா? காதல் தோற்று விட்டதா? நாயகி என்ன செய்தாள்? இருவரும் இணைந்தார்களா?
தெரிந்து கொள்ள வேண்டுமானால் கட்டாயம் படியுங்கள் "கண்கள் சொல்கின்ற கவிதை..."
காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். இரு உயிர்கள் மனங்கள் இணைந்து கவி பாடும் காலம் காதல் காலம். ஆனால் இரு உள்ளமும் திருமண வானில் இணைப்பறவைகளாய் சிறகடித்துப்பறந்தால் ஆனந்தம் தான்.
ஆசை ஆசையாக் காதலித்த இரு இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் கௌரவத்துக்கு மரியாதை கொடுத்துப் பிரிய முடிவெடுத்தால்...?
இருவரின் வாழ்க்கையும் என்ன ஆகும்?
காலம் அவர்களை ஒன்றாகச் சேர்க்குமா?
அப்படியே சேர்த்தாலும் இருவரின் மன நிலை எப்படி இருக்கும்?
தெரிந்து கொள்ளப் படியுங்கள் கனாக் கண்டேன் தோழி நான்.....
பொன் அந்திச் சாரல் நீ.....என்ற இந்தக் கதை, காதலுக்கும்,செஞ்சோற்றுக்கடனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்.
நிஷா அழகான இளம் பெண். செல்வாக்கான பெற்றோர், செல்லமான தம்பி என நிறை வாழ்வு வாழும் அவளது வாழ்க்கை பரத் என்னும் டாக்டர் நிஷாவின் தாய்க்கு ஆப்பரேஷன் செய்யும் போது செய்த தவறால் திசை மாறுகிறது. பெற்றோரை இழந்து, செல்வத்தை இழந்து தவிக்கிறாள். தூரத்து உறவு முறையில் சித்தி ஆதரவு காட்ட ஒண்டிக்கொள்கிறாள். பரத் மீது மாறாத கோபமும், வெறுப்பும் மண்டுகிறது அவள் மனதில்.
ஆனால் பரத் நிஷாவை மனமாரக் காதலிக்கிறான். அவனும் பெற்றோரை இழந்து மாமனின் ஆதரவில் படித்து டாக்டர் ஆனவன். அவன் நிலை என்ன? நிஷாவின் மனதில் பரத்தின் மேல் இருந்த வெறுப்பு மாறுமா? அவர்கள் இணைவார்களா? நிஷாவின் தம்பி சச்சினின் வெளி நாட்டில் படிப்பு என்ற கனவு நிறைவேறியதா?
இவற்றைத் தெரிந்து கொள்ள படியுங்களேன் "பொன் அந்திச் சாரல் நீ....".
படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்கள்.
முன்னுரை
வணக்கம் நண்பர்களே! "நீ வருவாய் என..." இது ஒரு அழகான காதல் கதை. காதல் என்பது இரண்டு மனம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. அது இரண்டு குடும்பங்களின் சந்தோஷம் சம்பந்தப்பட்டது. அதை உணர்ந்து காத்திருந்து தங்கள் காதலை எல்லோருடைய ஆசீர்வாதத்துடனும் நிறைவேற்றி கொள்ளும் போது கிடைக்கும் சுகம் பலமடங்கு. நந்தா-அபி, ஆதி- நந்து இந்த இரு ஜோடிகளின் காதலும் நட்பும் பாசமும் பிரிவும் தான் இந்த கதை.
இதை முதலில் தொடராக வெளியிட்ட சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது இதை சில்சீ "KiMo"வில் பிரசுரிப்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி,
அமுதினி