கதைக்குள்ளே செல்லுமுன் உங்களோடு ஒரு வார்த்தை...
"காதல் என்னும் அழகியே" என்ற இந்தக் கதை காதல் கதை ஆனால் சற்றே வித்தியாசமானது.
கல்லூரி நாட்களில் காதலிக்கும் இரு இளைஞர்கள் காலத்தால் பிரிகின்றனர். அவனுக்கு வாழ்க்கை வெற்றிகளை அள்ளித்தர, பாவம் அவள் என்ன ஆனாள்? மிகப்பெரிய நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் அவன் தன் முன்னாள் காதலியை துப்புரவுத் தொழிலாளியாக ஏன் பார்க்க நேர்ந்தது?
அவன் என்ன செய்யப் போகிறான்?
அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு என்ன ஆகும்?
இவற்றைப் பற்றித்தான் பேசுகிறது கதை. ஆனால் நிச்சயமாக ஒரு நல்ல வழியைத்தான் சொல்கிறதே அன்றி ஒழுக்கக் கேட்டை ஒரு நாளும் பேசாது.
இக்கதையின் கதாநாயகன் மீது நீங்களும் காதல் கொள்ளலாம். அதை விட அவன் மனைவியை நேசிக்கலாம்.
படித்து விட்டு என்னோடு உங்கள் கருத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
முன்னுரை
வணக்கம் நண்பர்களே! "நீ வருவாய் என..." இது ஒரு அழகான காதல் கதை. காதல் என்பது இரண்டு மனம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. அது இரண்டு குடும்பங்களின் சந்தோஷம் சம்பந்தப்பட்டது. அதை உணர்ந்து காத்திருந்து தங்கள் காதலை எல்லோருடைய ஆசீர்வாதத்துடனும் நிறைவேற்றி கொள்ளும் போது கிடைக்கும் சுகம் பலமடங்கு. நந்தா-அபி, ஆதி- நந்து இந்த இரு ஜோடிகளின் காதலும் நட்பும் பாசமும் பிரிவும் தான் இந்த கதை.
இதை முதலில் தொடராக வெளியிட்ட சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது இதை சில்சீ "KiMo"வில் பிரசுரிப்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி,
அமுதினி
ஸ்வீட் & சாஃப்ட் பேமிலி - ரொமாண்டிக் கதை!