கண்கள் சொல்கின்ற கவிதை என்பது முற்றிலும் புதிய தளத்தில் சொல்லப்பட்ட காதல் கதை.
அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதல் மனதில் பூத்திருக்கும். அதனை நினைவு படுத்தும் இந்தக் கதை.
காதல் ஒருவனை அழிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பல கதைகளிலிருந்து சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் காதல் ஒருவனை எந்த அளவு உயர்த்தியது என்பதே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படி உயர்த்திய காதலியின் நிலை என்ன?
அவன் நிலை உயர்ந்ததும் காதல் என்ன ஆனது? வீட்டாரின் எண்ணங்கள் மாறினவா? காதல் தோற்று விட்டதா? நாயகி என்ன செய்தாள்? இருவரும் இணைந்தார்களா?
தெரிந்து கொள்ள வேண்டுமானால் கட்டாயம் படியுங்கள் "கண்கள் சொல்கின்ற கவிதை..."
காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். இரு உயிர்கள் மனங்கள் இணைந்து கவி பாடும் காலம் காதல் காலம். ஆனால் இரு உள்ளமும் திருமண வானில் இணைப்பறவைகளாய் சிறகடித்துப்பறந்தால் ஆனந்தம் தான்.
ஆசை ஆசையாக் காதலித்த இரு இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் கௌரவத்துக்கு மரியாதை கொடுத்துப் பிரிய முடிவெடுத்தால்...?
இருவரின் வாழ்க்கையும் என்ன ஆகும்?
காலம் அவர்களை ஒன்றாகச் சேர்க்குமா?
அப்படியே சேர்த்தாலும் இருவரின் மன நிலை எப்படி இருக்கும்?
தெரிந்து கொள்ளப் படியுங்கள் கனாக் கண்டேன் தோழி நான்.....
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் சத்யாவும், கதாநாயகி தேன்மொழியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
தேன்மொழி சத்யாவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
சத்யாவோ தேன்மொழியைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!