Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

நீ தானா...! - பிந்து வினோத்

ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.

பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.

சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.

உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???

சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

Published in Books

மாற்றம் தந்தவள் நீ தானே - அமுதினி

மாற்றம் தந்தவள் நீ தானே...இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஜாலியான காதல் கதை. ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனைகளும் குழப்பங்களும் தீர்ந்து விடும் என்பது புரியாத இரண்டு காதல் உள்ளங்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் குழப்பங்களே இந்த கதை.

Published in Books

சூப்பர் ஜோக்ஸ் 02 - அனுஷா

வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்!

உங்களுடைய கவலை, வருத்தம்,  தனிமை, போர் என எதில் இருந்தும் தப்பிக்க இந்த சூப்பர் ஜோக்ஸ் கலக்ஷனைப் படியுங்கள்.

 

Published in Books

கங்கை ஒரு மங்கை - ரவை

 

ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 7

01. அவ ரொம்ப பாவம்மா!

02. தாய்க்கு செய்த பிராயச்சித்தம்!

03. நாத்திகரா, ஆத்திகரா?

04. பறிபோன பரிவட்டம்!

05. அலகிலா விளையாட்டுடையான்!

06. கங்கை ஒரு மங்கை

07. பாட்டியின் மனக்குறை

08. எல்லோரும் நல்லவரே!

09. அதற்குப் பெயர் தியாகமல்ல!

10. புதிய போர்வீரன்!

Published in Books

என் கனவு தேவதையே... - பிந்து வினோத்

Another edition available.

அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார்  (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.

இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.

அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??

Published in Books