Online Books / Novels Tagged : பிந்து - Chillzee KiMo

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - பிந்து வினோத்

எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!

35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.

 

அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!

முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.

 

ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?

 

நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.

யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?

 

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!

Published in Books

காதல் கதை - பிந்து வினோத்

இது ஒரு குட்டி காதல் கதை :-)

 

உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-) 

 

Published in Books

இது தான் காதலா?! - பிந்து வினோத்

இது ஒரு காதல் கதை ஃபிரென்ட்ஸ்!

என்ன, வித்தியாசமாக திருமணத்திற்குப் பின் வரும் காதலை சொல்லும் கதை!

பலக் கதைகள் எழுதினாலும் சில கதைகள் மனதிற்கு நெருக்கமானவை! அப்படி எனக்கு பிடித்த ஒருக் கதை இந்தக் கதை. படித்து ரொம்ப நாட்கள்... ஹுஹும் வருடங்கள் ஆகி விட்டது...!!!! மீண்டும் படித்தப் போது முதல் முறை எழுதி முடித்தப் போது ஏற்பட்ட அதே ஃபீல்! அதே ஸ்மைல்!

உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-) 

 

Published in Books

உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்

Another edition available.

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி! 

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா? 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books