Bindu Vinod

Bindu Vinod

Social Profiles

Facebook Instagram Twitter Messenger (by Facebook) Pinterest

மலர்கள் நனைந்தன பனியாலே... - பிந்து வினோத்

கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!

வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...

அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!

காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா? அந்த திருமணம் வெற்றி பெற்றதா???

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!

மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்

அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...

மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!

நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.

என்றென்றும் உன்னுடன்... - பிந்து வினோத்

கணவன் மனைவி உறவுக்கு பல விதமான பரிமாணங்கள் உண்டு.

அதில் ஒரு பரிமாணத்தை சொல்லும் நாவல் 'என்றென்றும் உன்னுடன்...'

நேர்த்தியான குடும்பக் கதை.

காதல் நதியென வந்தாய்... - பிந்து வினோத்

Another edition available.

தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???

காதல் நதியென வந்தாய்...!!!!

இனிய எளிய காதல் கதை :-)

 

மனம் விரும்புதே உன்னை...!

Other editions available!!! Click here to view other editions of this book.

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!