Online Books / Novels Tagged : Vinod - Chillzee KiMo

மலரே ஒரு  வார்த்தைப் பேசு...  இப்படிக்கு  பூங்காற்று...! - பிந்து வினோத்

Second edition.

மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???

ம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.

திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள்.  சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...

விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.

மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!

பிரிந்தவர்கள் இணைவார்களா???

அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

 

Published in Books

மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்

Second edition.

அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...

மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!

நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.



Published in Books

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத்

கதையைப் பற்றி:

வணக்கம் நட்பூஸ்,

இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இது சில வருடங்களுக்கு முன்பே நான் எழுத யோசித்த கதை. கதையில் ஹீரோ ஹீரோயினுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் நான்ட்ஸ் - எஸ்.கே'வே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

ஸோ, இதுவும் ஒரு நான்ட்ஸ் & எஸ்.கே கதை :-)

கதை சுருக்கம்:

ஒரு விபத்தில் பழைய நினைவுகள் இழந்து விடுகிறான் எஸ்.கே. அவனுக்கு நினைவு இருப்பது ஒன்றே ஒன்று - அது 'நந்தினி'!

யார் நந்தினி என்று புரியாமல் தவிப்பவன் ஒரு கிராமத்தில் டாக்டராக இருக்கும் நந்தினியை சந்திக்கிறான். அவள் யார் என்று நினைவில்லை என்றாலும் அவள் மீது காதல் வசப் படுகிறான்.

எஸ்.கே'விற்கு பழைய வாழ்க்கை நினைவில் இல்லை என்பது தெரியாமலே, நந்தினியும் அவனை விரும்புகிறாள். எங்கே உண்மையை சொன்னால் நந்தினி அவனை நோயாளியாக பார்க்க தொடங்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் முதலில் உண்மையை மறைத்த எஸ்.கே, நந்தினி காதலை சொன்ன பிறகு எப்படி அவளிடம் உண்மையை சொல்வது என்று புரியாது தயங்குகிறான்.

நந்தினிக்கு உண்மை தெரிய வந்ததா? எஸ்.கே'விற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? நந்தினி - எஸ்.கே காதல் வெற்றிப் பெற்றதா???

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்.

 

Episodes:

00. Free Preview - Go to Prologue

01. Free Preview - Go to Episode 01

02. Free Preview - Go to Episode 02

03. Free Preview - Go to Episode 03

04. Free Preview - Go to Episode 04

05. Free Preview - Go to Episode 05

06. Free Preview - Go to Episode 06

07. Free Preview - Go to Episode 07

08. Free Preview - Go to Episode 08

09. Free Preview - Go to Episode 09

10. Free Preview - Go to Episode 10

11. Free Preview - Go to Episode 11

12. Free Preview - Go to Episode 12

13. Free Preview - Go to Episode 13

14. Free Preview - Go to Episode 14

15. Free Preview - Go to Episode 15

16. Free Preview - Go to Episode 16

17. Free Preview - Go to Episode 17

18. Free Preview - Go to Episode 18

19. Free Preview - Go to Episode 19

20. Free Preview - Go to Episode 20

21. Free Preview - Go to Episode 21

22. Free Preview - Go to Episode 22

23. Free Preview - Go to Episode 23

24. Free Preview - Go to Episode 24

25. Free Preview - Go to Episode 25

26. Free Preview - Go to Episode 26

 


 

Published in Books