Online Books / Novels Tagged : Sagampari - Chillzee KiMo

மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி

சதாக்ஷி கல்லூரி மாணவி. அழகான அமைதியான அவளுடைய வாழ்க்கை ஒருநாள் மாறிப்போனது. அவளிடம் காதலை தெரிவித்த வைசாக், அது நிராகரிக்கப்பட்ட மன அழுத்தத்தில் அவள் கண் முன்னேயே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான். குற்ற உணர்வில் சதாக்ஷி அச்சம் அடைகிறாள். அதிலிருந்து அவளை தொடரும் விரும்பத்தகாத சம்பங்கள்....

அவற்றிலிருந்து அவளை நாயகன் புவன்நிருபேஷ் காத்திடுவானா...? அவள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினாளா..

கதையை தொடர்வோமா?

Published in Books

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி

முன்னுரை

பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு…  பெற்றோர் யார் என்றே  தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

அவளிடம் அக்கரை கொள்ளும்  அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Published in Books

யாது வரினும்.. எவ்வாறாயினும் - சாகம்பரி

நித்திலா… பெற்றோரை இழந்திருந்தாலும்… தாத்தாவின் அரவணைப்பில் தாய்வழி உறவுகளின் அன்பில் வளர்ந்தவள்.  உறவுகளின் அருகாமையையும் அருமையையும் போற்றுபவள்.

சக்திமித்ரன் பெற்றோர் இருந்தும் காலத்தின் கோலத்தால் தனித்து விடப்பட்டவன். உறவுகளில் உண்மை இல்லை என்று நினைப்பவன்.

சக்திமித்ரன்… நித்திலா இருவரும் காதலித்து  திருமணத்தில் இணைந்து பின் பிரிந்து விடுகிறார்கள். பின்னாளில் மனைவியின் நிலை புரிந்து அவனுடைய தவறான முடிவுகளால் நித்திலா இழந்த இனிமையான உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறான்.

உறவுகளின் மேன்மை புரிந்து யாருடைய குறுக்கீடும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி அவன் அவளுக்காக அனைத்து உறவுகளையும் சேர்த்து மாலையாக கோர்த்தெடுக்கப்போகிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?

அன்புடன்

சாகம்பரி

Published in Books

மோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி

மூங்கில் வனத்திற்கு மட்டும் என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!.  சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.

 ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது…  இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?

துரோகத்தாலும் சதியாலும் உயிர் துறந்து  மௌனமாக மாறிய ஒரு தேவதையின் கதை இது. நித்திலவல்லி மீண்டும் மானஸாவாக பிறப்பெடுத்தது பழி தீர்க்கவா… வேணுமாறன் மீது விழுந்த பழியை துடைக்கவா?.  கதையை படிக்கலாமா?

அன்புடன்

சாகம்பரி

Published in Books

யானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி

தலைப்பு: யானும் நீயும் எவ்வழி அறிதும்… அப்படியென்றால்… நானும் நீயும் எந்த வழியாக ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?... அதாவது இந்த காதல்தானே நம்மை இணைத்து வைத்தது. இருவருக்கிடையே அறிமுகம் ஏற்படவும்…அன்பு ஏற்படவும்… உறவு ஏற்படவும் ஏதாவது ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் எது?

சில சமயம் உறவின் முறையில் இருக்கலாம்…

சில சமயம் நட்பின் அடிப்படையில் இருக்கலாம்..

அவர்கள் இருப்பிடத்தை பொறுத்தவரை அண்டைவீடு இருக்கலாம்.... அடுத்த தெருவாக இருக்கலாம்… பக்கத்து ஊராக இருக்கலாம்… அண்டை மாநிலமாக இருக்கலாம், அட, அடுத்த தேசமாகக் கூட இருக்கட்டுமே.  ஆனால் அடுத்த உலகமாக இருந்தால்…

அச்சோ… உள்ளூர் காதல் கலவரத்தையே சமாளிக்க முடியவில்லை… இதில் இவர்களை எப்படி சமாளிப்பது?

ம்… புரிந்திருக்குமே? ஆமாம் இரண்டு வெவ்வேறு உலகங்களை சார்ந்தவர்கள் இணையும் கதைதான்…

பட்… ட்ரஸ்ட் மீ! மாறுபட்ட உலகின் வேறுபட்ட எதிக்ஸ்…. எண்ணங்கள்… அறிவியல் சிக்கல்கள்… வேற்றினத்தின் மீதான வெறுப்பு… இத்தனையும் தாண்டி எப்பவும் நம்ம ஓட்டு காதலின் வெற்றிக்குத்தான்!

அப்படியே ப்ளாக் ஹோல், வார்ம் ஹோல், பரலல் யுனிவர்ஸ், டைம் டைலேஸன் போன்ற விண்வெளி விசயங்களை தெரிந்து கொள்வோமா…

ஐன்ஸ்டைன் மற்றும் விண்வெளி இயற்பிலார் ஸ்டிஃபன் ஹாக்கின்ஸின்   நிருபிக்கப்பட்ட…  நிருபிக்கப்படாத.. தியேரிகளை உதவி கொண்டு ட்ராவல் செய்யலாமா?.

அன்புடன்

சாகம்பரி

Published in Books