சதாக்ஷி கல்லூரி மாணவி. அழகான அமைதியான அவளுடைய வாழ்க்கை ஒருநாள் மாறிப்போனது. அவளிடம் காதலை தெரிவித்த வைசாக், அது நிராகரிக்கப்பட்ட மன அழுத்தத்தில் அவள் கண் முன்னேயே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான். குற்ற உணர்வில் சதாக்ஷி அச்சம் அடைகிறாள். அதிலிருந்து அவளை தொடரும் விரும்பத்தகாத சம்பங்கள்....
அவற்றிலிருந்து அவளை நாயகன் புவன்நிருபேஷ் காத்திடுவானா...? அவள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினாளா..
கதையை தொடர்வோமா?
முன்னுரை
காதலோ... அன்போ... பாசமோ… நல்ல உறவுகளை நாம் தேடித் தேடி அலைவோம். அப்படி தேடித்தேடி அலைந்து காத்திருந்து கிடைத்த ஒன்றை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமா என்றால்... இல்லை. ஏனெனில் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு வரையறையை கொடுத்த தந்து கொண்டு அந்த வரையறைக்குள் அந்த உறவு இருக்கிறதா அவர்களது போல நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம்.
எதுவாக இருந்தால் என்ன?. உறவு... உறவுதான்!. அதை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ரோஜாபூவிற்கென்று லரையறை எதுவும் இருக்கிறதா…?. இதுதான் அதன் நிறம்… இதுதான் அதன் மணம்… இதுதான் அதன் அளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? அது கொடி வகையா செடி வகையா என்று கூட தெரியாது. அத்தனை வகைகள் இருக்கின்றன. ஆனால் அவை அத்தனையையும் ரோஜா என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்.
அதுபோலத்தான் ஒவ்வொரு உறவிற்கும் அன்பும் அக்கரையும் இருந்தால் போதும். அது நீடித்து நலமுடன் இருந்து நம்மையும் வாழ வைக்கும். காதலுக்கு இது மிகவும் பொருந்தும். நாம் நேசிப்பவரிடம் உண்மையான அன்பு கொள்வதும் அவர் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று அக்கரை கொள்வதும்தான் அந்த காதலை சிறப்பிக்கும்.
இது ஒரு காதல் கதைதான். கதாநாயகன் ஹிதேஷிற்கும் கதாநாயகி பிரமோதாவவிற்கும் இடையேயான காதல்… அந்தப் பாதை.. அதை அவர்கள் கடந்து வந்த விதம்… ஆகியவற்றைப் பற்றிய கதைதான். பிணை வேண்டும் என்றால் அடிமையை தேடும் என்றும் கொள்ளலாம்.. அடிமையாக வேண்டும் என்றும் கொள்ளலாம்.. யார் யாராகிறார்கள் என்றூ கதையை படித்து தெரிந்து கொள்வோமா?
முன்னுரை
பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.
ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.
தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு… பெற்றோர் யார் என்றே தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.
அவளிடம் அக்கரை கொள்ளும் அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…
இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.
ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நித்திலா… பெற்றோரை இழந்திருந்தாலும்… தாத்தாவின் அரவணைப்பில் தாய்வழி உறவுகளின் அன்பில் வளர்ந்தவள். உறவுகளின் அருகாமையையும் அருமையையும் போற்றுபவள்.
சக்திமித்ரன் பெற்றோர் இருந்தும் காலத்தின் கோலத்தால் தனித்து விடப்பட்டவன். உறவுகளில் உண்மை இல்லை என்று நினைப்பவன்.
சக்திமித்ரன்… நித்திலா இருவரும் காதலித்து திருமணத்தில் இணைந்து பின் பிரிந்து விடுகிறார்கள். பின்னாளில் மனைவியின் நிலை புரிந்து அவனுடைய தவறான முடிவுகளால் நித்திலா இழந்த இனிமையான உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறான்.
உறவுகளின் மேன்மை புரிந்து யாருடைய குறுக்கீடும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி அவன் அவளுக்காக அனைத்து உறவுகளையும் சேர்த்து மாலையாக கோர்த்தெடுக்கப்போகிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?
அன்புடன்
சாகம்பரி
மூங்கில் வனத்திற்கு மட்டும் என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!. சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.
ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது… இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?
துரோகத்தாலும் சதியாலும் உயிர் துறந்து மௌனமாக மாறிய ஒரு தேவதையின் கதை இது. நித்திலவல்லி மீண்டும் மானஸாவாக பிறப்பெடுத்தது பழி தீர்க்கவா… வேணுமாறன் மீது விழுந்த பழியை துடைக்கவா?. கதையை படிக்கலாமா?
அன்புடன்
சாகம்பரி