Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள்

 

மனமார்ந்த நன்றி

கலங்கி நிற்கும் போதெல்லாம், ஆறுதல் சொல்லி அரவணைக்கும்
என் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்!

 

அட்டைப்பட வடிவமைப்பு: நிவேதிதா மணிவண்ணன் 

கதைச்சுருக்கம்:

 தான் மணமுடிக்கப்போகும் மங்கை கமலினையைக் கண்கள் கண்ட பொழுதில் காதல் கொள்கிறான் கதையின் நாயகன் ஸ்ரீஹரிஹரன். சொந்தங்கள் ஆசிகூறி திருமணம் நடந்தேற, முதலிரவு அறைக்குள் தன் மனைவிக்காக காத்திருக்கிறான் அவன்.

அறைக்குள் பாதம் பதித்த கமலினிக்கு,   பிறருக்கு தெரியாமல், தன் விழிகளோடு மட்டுமே உறவாடும் காதலனைப் பற்றிச் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைக்கேட்ட ஸ்ரீஹரிஹரனின் நிலை என்ன?  அவர்கள் திருமண வாழ்க்கை மனங்களைச் சேர்க்குமா?  அதில் மணம் வீசுமா? என்ற பல வினாக்களுக்கு விடையே ,  திகில் கலந்த தித்திக்கும் காதல் கதை, `நினைவுகளுக்கும் நிழல் உண்டு`

Published in Books

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி

முன்னுரை

பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு…  பெற்றோர் யார் என்றே  தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

அவளிடம் அக்கரை கொள்ளும்  அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Published in Books

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் - Chillzee Originals

காதல் கதைகள் படிப்பது நம் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம்.

கதை எனும் கற்பனை உலகை தாண்டி நிஜ உலகிலும் பல அழகான காதல் கதைகள் இருக்கின்றன.

அப்படி கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்த பத்து நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகளின் கதை தொகுப்பு இங்கே.

Published in Books

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்

மூன்று காதல் கதைகள். மூன்றும் மூன்று விதம்.

கதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Published in Books

கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

Published in Books