காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.
இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
வெற்றி'யின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
ஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி " சீர் மிகு சித்திரை பிறப்பு" புத்தகம் .
கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்
அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.
இளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.
மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.
பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.
இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.
இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை "தொலைந்து போனதுஎன் இதயமடி" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ராசு