Online Books / Novels Tagged : OKR - Chillzee KiMo

காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

கதைக்குள்ளே செல்லுமுன் உங்களோடு ஒரு வார்த்தை...

"காதல் என்னும் அழகியே" என்ற இந்தக் கதை காதல் கதை ஆனால் சற்றே வித்தியாசமானது.

 

கல்லூரி நாட்களில் காதலிக்கும் இரு இளைஞர்கள்  காலத்தால் பிரிகின்றனர். அவனுக்கு வாழ்க்கை வெற்றிகளை அள்ளித்தர, பாவம் அவள் என்ன ஆனாள்? மிகப்பெரிய நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் அவன் தன் முன்னாள் காதலியை துப்புரவுத் தொழிலாளியாக ஏன் பார்க்க நேர்ந்தது?

அவன் என்ன செய்யப் போகிறான்?

அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு என்ன ஆகும்?

 

இவற்றைப் பற்றித்தான் பேசுகிறது கதை. ஆனால் நிச்சயமாக ஒரு நல்ல வழியைத்தான் சொல்கிறதே அன்றி ஒழுக்கக் கேட்டை ஒரு நாளும் பேசாது.

 

இக்கதையின் கதாநாயகன் மீது நீங்களும் காதல் கொள்ளலாம். அதை விட அவன் மனைவியை நேசிக்கலாம்.

 

படித்து விட்டு என்னோடு உங்கள் கருத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Srija Venkatesh
Srija Venkatesh
Published in Books

உன்னைத் தானே...! - பிந்து வினோத்

Other editions available!!! Click here to view other editions of this book.

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Unnai thaane story reviews from our readers.

  

 

Published in Books



பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

Hi Friends,

இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...

ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...

கதையை பற்றி??

என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவாரஸ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...

உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

Published in Books

எங்கே எந்தன்  இதயம் அன்பே...! - பிந்து வினோத்

 

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

 

காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.

Published in Books

எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்

 

நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!

அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!

நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??

சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?

நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.

குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.

Published in Books