Online Books / Novels Tagged : பிந்து வினோத் - Chillzee KiMo

ரோஜா மலரே ராஜக்குமாரி...! - பிந்து வினோத்

Chillzee Princess Series - 01 - Princess Rohini.

இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.

அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?

 

Published in Books

எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்

 

Dedication

இந்தக் கதை,

தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,

எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்

சமர்ப்பணம்!!!!

 

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

 

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,

கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.

  

 

Published in Books

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத்

தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.

திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books

உயிர் கேட்கும் அமுதம் நீ...!

Other editions available!!! Click here to view other editions of this book.

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!

Published in Books

நீ தானா...! - பிந்து வினோத்

ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.

பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.

சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.

உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???

சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

Published in Books