Online Books / Novels Tagged : சசிரேகா - Chillzee KiMo

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா

 முன்னுரை

எனது இந்த கதைப்படி காதலி தன் காதலனை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு வருகிறாள். காதலனுக்கு தான் யாரென தெரியாமலே அவனுடைய பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுபிடித்து அதை அவனை வைத்தே ஒவ்வொன்றாக தீர்க்கிறாள்.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு காதலன் தன் காதலி யாரென கண்டுபிடித்தானா அவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக ”நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்” என்ற தலைப்பில் கதையாக எழுதியுள்ளேன். 

 

Chillzee Reviews

  

 

Published in Books

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா

முன்னுரை
தான் தேடும் காதலனே தோழன் என்பதை அறியாத கதாநாயகியும் தன் மேல் பொய்யான பழியை சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த எதிரிகளை பழிவாங்கத் துடிக்கும் கதாநாயகனும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.

Published in Books

இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - சசிரேகா

முன்னுரை
நிறைய வீடுகள்ல பெண் குழந்தைங்க சின்ன வயசா இருக்கறப்பவே இவன்தான் உன் மாமன் இவனைதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றதும், பையன்கள் கிட்ட இவள்தான் உன் பொண்டாட்டி, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வளர்ப்பாங்க, அதே போல பெண் வயதுக்கு வந்தால் அவளுக்கு முறை செய்பவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வைப்பாங்க
இதை கேட்டு கேட்டு வளர்ற குழந்தைங்க மனசுல ஆழமா அந்த எண்ணம் பதிஞ்சிடுது, முதல்ல இப்படி சொல்லாம பெரியவங்க வளர்த்திருக்கனும், இல்லைன்னா குழந்தைகள் பெரியவங்களான பின்னாடி பெரிய பிரச்சனைகள் ஏற்படும், இதனால் எத்தனையோ பேர் அவமானப்படறாங்க, சொந்தங்களில் பிளவு ஏற்படுது, அப்படியொரு நிகழ்வினால் உருவாக்கப்பட்ட கற்பனை கதையே இக்கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இக்கதைக்களம் முழுக்க முழுக்க கற்பனையானது. இக்கதை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை.

Published in Books