அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார் (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.
இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் சத்யாவும், கதாநாயகி தேன்மொழியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
தேன்மொழி சத்யாவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
சத்யாவோ தேன்மொழியைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
கதைக்குள்ளே செல்லுமுன் உங்களோடு ஒரு வார்த்தை...
"காதல் என்னும் அழகியே" என்ற இந்தக் கதை காதல் கதை ஆனால் சற்றே வித்தியாசமானது.
கல்லூரி நாட்களில் காதலிக்கும் இரு இளைஞர்கள் காலத்தால் பிரிகின்றனர். அவனுக்கு வாழ்க்கை வெற்றிகளை அள்ளித்தர, பாவம் அவள் என்ன ஆனாள்? மிகப்பெரிய நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் அவன் தன் முன்னாள் காதலியை துப்புரவுத் தொழிலாளியாக ஏன் பார்க்க நேர்ந்தது?
அவன் என்ன செய்யப் போகிறான்?
அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு என்ன ஆகும்?
இவற்றைப் பற்றித்தான் பேசுகிறது கதை. ஆனால் நிச்சயமாக ஒரு நல்ல வழியைத்தான் சொல்கிறதே அன்றி ஒழுக்கக் கேட்டை ஒரு நாளும் பேசாது.
இக்கதையின் கதாநாயகன் மீது நீங்களும் காதல் கொள்ளலாம். அதை விட அவன் மனைவியை நேசிக்கலாம்.
படித்து விட்டு என்னோடு உங்கள் கருத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!