Online Books / Novels Tagged : Vinod - Chillzee KiMo

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - பிந்து வினோத்

எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!

35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.

 

அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!

முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.

 

ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?

 

நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.

யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?

 

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!

Published in Books

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத்

Second edition!!!!!

இது 'உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்...' நாவலின் இரண்டாம் பதிப்பு.

முதல் பதிப்பில் இருந்து பல விதமான மாற்றங்கள் மற்றும் பல பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி!!

 

கதையைப் பற்றி:

மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.

சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.

சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.

ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன?  அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??

தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!

Published in Books