Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 14

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 14: - off the screen!!

   

தான்யா தூக்கம் வராமல் படுத்திருந்தாள். எதற்காக என்று புரியாமலே அவளின் மனம் அறிவழகனையே சுற்றி வந்துக் கொண்டிருந்தது.

   

விபத்திற்கு பிறகு காரில் இருந்து அவளை அவன் காப்பாற்றிய போது அவள் அவனை கட்டிப் பிடித்து முத்தமிட்டதாக சொன்னானே...

   

அது உண்மையா என்று தான்யாவால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

   

ஆனால் அது பற்றிய பேச்சு தான்யாவிற்கு தர்மசங்கடத்தை கொடுப்பது தெரிந்ததும் அறிவழகன் பேச்சை மாற்றிய பாங்கும், அதைப் பற்றி அதற்கு பிறகு பேசாமலே இருக்கும் பாங்கும் அவளை கவர்ந்தது!

   

கடினமானவனாக காட்டிக் கொண்டாலும் அந்த கரடிக்குட்டியின் உள்ளேயும் மென்மை இருக்க தான் செய்கிறது!

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home