முன்னுரை
இக்கதையின் நாயகன் தவறுதலாக மணமேடை மாறி அமர்ந்ததால் யாரென்றே தெரியாத நாயகியுடன் திருமணம் முடிந்த நிலையில் அப்போது அந்த இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நாயகி காணாமல் போய்விட எப்படி நாயகன் நாயகியை தேடிப்பிடிக்கிறான்?
நாயகியிடம் உண்மையைச் சொல்லும் நாயகனை எவ்வாறு நம்புகிறாள் நாயகி??
நாயகியின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து அவளது காதலையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கப் போராடும் கதாநாயகன் இறுதியில் வாழ்க்கையில் ஜெயித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.
தீபா என்ற இளம் பெண்ணைச் சுற்றி நெய்யப்பட்டுள்ளது இந்த நாவல். அவளது மன உணர்வுகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் அவளது காதலைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது காதலென்னும் பொன்னூஞ்சல் நாவல். இன்னமும் நம் நாட்டில் பல பெண்களுக்கு இரக்கம், அனுதாபம் போன்ற உணர்வுகளே காதலின் அடிப்படையாக அமைகின்றன. ஆனால் அவை உண்மையான காதலாகுமா?
காதலிலும் விட்டுக்கொடுத்தல் வேண்டும் தான். ஆனால் சுயகௌரவமே இல்லாத அளவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தால் என்ன செய்ய? கதிரின் நடவடிக்கைகள் பிடிக்கவேயில்லை என்றாலும் பொறுத்துப் போகும் படி சொல்கிறது அவளது மனசாட்சி. ஆனால் அதே நேரத்தில் இன்னொருவனோடு இருக்கும் போது சுதந்திரமாகவும் சௌகரியமாகவும் உணர்கிறாள் தீபா. இது என்ன மாதிரியான உணர்வு? கதிர் சரியில்லை என வேறொருவனிடம் காதல் கொள்கிறோமோ? இது சரியா? தான் தவறிழைக்கிறோமோ? என பலப்பல குழப்பங்களின் சிக்கித் தவிக்கிறாள் நம் கதாநாயகி தீபா. அவளது தோழி அனிதா பக்க பலமாக இருக்கிறாள். இறுதியில் தீபா என்ன முடிவு எடுக்கிறாள்?
படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் வாசகர்களே! இதோ உங்களுக்காக "காதலென்னும் பொன்னூஞ்சல்".
முன்னுரை
எதிர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.
இது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும். இக்கதையில் வரும் மாந்தர்கள் யாரும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல.
முன்னரை
இருமாறுப்பட்ட எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும் தங்களது விருப்பங்களை விட்டுக் கொடுக்காமல் காதலித்து அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் போராடி பல பிரச்சனைக்களுக்குப் பிறகு அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்.
பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.
நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.
வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!