Chillzee KiMo Books - முகமூடிகள் - சசிரேகா : Mugamoodigal - Sasirekha

முகமூடிகள் - சசிரேகா : Mugamoodigal - Sasirekha

 

நிர்மலா நிர்மலா” என தனது மருமகளை அழைத்தார் கஸ்தூரி ஆனால் நிர்மலாவிடம் இருந்து பதில் இல்லை அதை நினைத்து நொந்துப் போனவர் உடனே,

  

”நிம்மி நிம்மி” என மீண்டும் அழைத்தார் இம்முறை நிர்மலாவிடம் இருந்து பதில் வந்தது,

  

”இதோ வந்துட்டேன் மம்மி” என்றாள் அதைக்கேட்டு கஸ்தூரிக்கு சலிப்பே வந்தது,

  

”மம்மியாம் மம்மி, கேட்கவே நல்லாயில்லை ஒண்ணு அத்தைன்னு கூப்பிடனும் இல்லையா அம்மான்னு கூப்பிடனும், இவள் பேருக்கு ஏத்த மாதிரியே எப்படி என்னைக் கூப்பிடறா பாரு, என் பையன் கூட என்னை மம்மின்னு கூப்பிட்டதில்லை, இப்படி கூப்பிட்டா எனக்கு பிடிக்காதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் வீம்புக்குன்னே கூப்பிடறா, இவளை என்னத்த சொல்றது” என மனதுக்குள் நினைக்கும் போதே வந்தாள் நிர்மலா,

  

”மம்மி கூப்பிட்டீங்களா மம்மி”,

  

”ஆமாம் காலையில எழுந்து ரொம்ப நேரமாச்சி ஒரு டீ கிடைக்குமா”,

  

”அய்யோ மம்மி, டீயெல்லாம் குடிக்காதீங்க பித்தம், நான் உங்களுக்கு ஹெல்த்தி ட்ரிங்க் கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றவளை பித்து பிடித்தது போல பார்த்து வைத்தார் கஸ்தூரி,

  

சில நிமிடங்களில் கஸ்தூரிக்கு ஹெல்த் ட்ரிங் எனும் பேரில் கேழ்வரகு கஞ்சியை கொண்டு வந்து தந்தாள் நிர்மலா. அதைப் பார்த்ததும்,

  

”ஏம்மா நிம்மி, இந்த ராகி கஞ்சியைதான் நீ ஹெல்த் ட்ரிங்க்னு சொன்னியா”,

  

”எஸ் மம்மி, நேத்து யூ-ட்யூப்ல பார்த்தேன், உங்களை போல வயசானவங்களுக்கு இதைதான் கொடுக்கனும்னு சொன்னாங்க”,

  

”அப்படியா சரி சரி நீ வேலைக்கு கிளம்பலையா”,

  

“இதோ கிளம்பிட்டேன் மம்மி, டிபன் எடுத்து வைச்சிருக்கேன் சாப்பிடுங்க”,

  

”டிபன் என்னம்மா”,

  

”ப்ரட் டோஸ்ட்”,

  

”என்னதும்மா” என பதறினார்,