13.
விஸ்வநாதனும் ஜனனியிடம் தடை இல்லாது பகிர்ந்தார்.
“மழை கொட்டிட்டு இருந்த நாள், எதையோ வாங்கனும்னு அம்மாவும், மகளும் கடைக்கு கிளம்பினாங்க. அப்போ நடந்த விபத்துல டிரைவரும், என் மனைவியும் அங்கேயே இறந்துட்டாங்க. காருண்யாவை காயத்தோட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தாங்க. அவ கண்ணு திறக்கவே மூணு நாளு ஆச்சு. அதுக்கு அப்புறம் தான் நடந்த விபத்துல காருண்யாவோட கர்பப்பை சேதமாகிடுச்சுன்னு தெரிய வந்தது. காருண்யாக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya