Chillzee KiMo Books - கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத் : Kanavugal mattum enathe enathu... - Bindu Vinod

கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத் : Kanavugal mattum enathe enathu... - Bindu Vinod
 

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

 

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

 

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!

 

1.

  

இரு விழி உனது...

  

ப்ரூவ்ட்!

  

“யுவர் விசா இஸ் அப்ரூவ்ட்!”

  

(உங்கள் விசா அப்ரூவ் ஆகி விட்டது!)

  

எதிரே இருந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் முன் இருந்த காகித தாள்களை ஒன்றாகத் திரட்டிக் கையில் இருந்த ஃபைலில் வைத்தாள் நந்தினி. அவளின் முகத்தில் பல சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல் ஒளி வீசியது. கண்கள் நட்சத்திரங்களாய் மின்னியது.

  

அவளின் பல வருடக் கனவு நனவாகப் போகிறது.

  

அமெரிக்கா... அவளின் கனவு தேசம்... அங்கே சென்று படிக்க, சொர்க்கத்திற்குச் செல்லும் சாவியாக விசா கிடைத்து விட்டது.

  

மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் பணத்தைக் கட்டி விஸாவிற்கான ரசீது பெற்றுக்கொண்டு, இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீடு சென்றாள்.

  

??❀✿?

 

ந்தினி - இருபத்தி நான்கு வயது இளநங்கை. நம் கதையின் கதாநாயகி.

  

கதைகளில் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளின் உருவத் தோற்றம் எதுவுமே இவளிடம் இல்லை.

  

மாநிறம்... இயல்புக்குச் சற்றே குறைந்த உயரம்.

  

அவளின் தம்பியும், தங்கையும் அவளைச் செல்லமாக, ‘குஷ்பூ’ என்று அழைக்கும் விதத்தில் சற்றே பூசினார் போன்ற உடல் வாகு.

  

மொத்தத்தில் கூட்டத்தில் நாம் தினமும் பார்த்துக் கவனிக்காமல் செல்லும் பல சராசரி பெண்களில் ஒருத்தி.

  

நந்தினியின் தோற்றம் அப்படி இருந்தாலும், குணத்திலும், அறிவிலும் அவள் மற்ற பல கதாநாயகிகளைவிட வெகு சிறந்தவள். சென்னையில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலை இருந்தது. மாதந்தோறும் கணிசமான சம்பளம் வந்தது.

  

??❀✿?

  

ந்தினி வீட்டின் கேட்டை திறந்த சத்தம் கேட்டு உள்ளே இருந்து அவளின் தங்கை சுனந்தினியும், தம்பி நந்துவும் எட்டிப் பார்த்தார்கள்.

  

“அக்கா என்னக்கா ஆச்சு? எத்தனை தடவை போன் செய்றோம், நீ எடுக்கவே இல்லை. சொல்லுக்கா...”

  

சுனந்தினியின் ஆர்வமான கேள்விக்குப் பதில் சொல்லாமல் சின்னப் புன்னகையுடன் ஹாலில் சென்று அமர்ந்தவள்,

  

“கன்சலேட் உள்ள போறப்போ செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து செக்யூரிட்டி கிட்ட கொடுத்துட்டு போனேன், சுனி. திரும்ப ஆன் செய்ய மறந்துட்டேன்” என்றாள்.