Online Books / Novels Tagged : women - Chillzee KiMo

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - உன்னை கண் தேடுதே...! - Chillzee Originals

சமர்ப்பணம்:

பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!

 

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

கண்ணை நம்பாதே... - பிந்து வினோத்

இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பாக நான் எழுதியது...

என்னுடைய ரொமாண்டிக் கதைகளையே படித்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் :-)

படித்து விட்டு சொல்லுங்கள்.

Published in Books

பனிப்பாறை - பிந்து வினோத்

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை! நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.

இந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான்! கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்!

பொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.

ஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

Published in Books

எங்கே எனது கதை?? - பத்மினி  செல்வராஜ்

Hi Friends,

என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...

நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை  எழுதுவதில்...

அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!! 

இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

Hope you like my short stories as well.. Happy Reading!!!

- அன்புடன் பத்மினி

 

Published in Books

ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

இதுவரை காதலை மையப்படுத்தி அதனுடன் இணைந்த குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கூறினேன். இந்த கதையில் காதல் என்பது இருக்கும். ஆனால் அதை நான் மையப்படுத்தவில்லை.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ (தமிழில் இரண்டு படங்கள் இருப்பதால் நடிகர்களை குறிப்பிட்டுள்ளேன்) படத்தில் வரும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ என்ற பாடல் சகோதரர்களின் பாசத்தை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும். நான் சொன்ன அந்த வரி எனக்கு பிடித்திருந்தது.

அதனால் நான் சகோதரிகளைப் பற்றி சொல்லப்போகும் இந்தக் கதையின் தலைப்பை ‘ஒரு கூட்டுக் கிளிகள்’ என்று வைத்திருக்கிறேன்.

அந்த சகோதரிகள் உங்களை கதையில் சந்திக்க வருகிறார்கள்.

நன்றி!

Published in Books
Page 2 of 3