இது ஒரு சிம்பிள் லவ் story :-)
நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...
அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)
Things we lose have a way of coming back to us in the end...!
ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??
சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?
நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
Hi Friends,
என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...
நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை எழுதுவதில்...
அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!!
இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...
Hope you like my short stories as well.. Happy Reading!!!
- அன்புடன் பத்மினி
டைரியில் கதை படிப்பது சுவாரசியமான ஒரு விஷயம்! அப்படி ஒரு கதை படிப்போமா???
'என்னுடைய டைரிகளில் இருந்து...' ஒரு சின்னக் குட்டிக் கதை!
டைரி பக்கங்களை புரட்டுவோமா???