ஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி " சீர் மிகு சித்திரை பிறப்பு" புத்தகம் .
ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 7
01. அவ ரொம்ப பாவம்மா!
02. தாய்க்கு செய்த பிராயச்சித்தம்!
03. நாத்திகரா, ஆத்திகரா?
04. பறிபோன பரிவட்டம்!
05. அலகிலா விளையாட்டுடையான்!
06. கங்கை ஒரு மங்கை
07. பாட்டியின் மனக்குறை
08. எல்லோரும் நல்லவரே!
09. அதற்குப் பெயர் தியாகமல்ல!
10. புதிய போர்வீரன்!
அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார் (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.
இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??