முன்னுரை
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.
சிவா, அபிலாஷ், தீபக் மூவரும் நெருங்கிய நண்பர்கள். சிறுவனாக இருந்தப் போது சந்தித்த மன அதிர்ச்சியினால் சிவா பொதுவாக பாதுகாப்பற்ற உணர்வுடனே இருக்கிறான். இதனால் அபிலாஷ், தீபாக் தாண்டி யாருடனும் சிவா நெருங்கி பழகுவதே இல்லை.
அப்படிபட்டவன் மேனகாவை பார்த்த உடன் காதல் வசப்படுகிறான். மேனகாவும் அவனை விரும்புகிறாள்.
ஆனால், சிவாவின் மன சிக்கலை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறான் கோபால்.
கோபாலின் சதி வெற்றிப் பெற்றதா? அல்லது சிவா - மேனகா காதல் வெற்றி பெறுமா?