Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

மாலையில்  யாரோ மனதோடு  பேச...! - பிந்து வினோத்

Chillzeeயில் என்றென்றும் உன்னுடன் - 01 என்ற பெயரில் தொடராக வந்த கதை இது.

சிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.

எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.

மூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.

சிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.

இது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.

சரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...!

ரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது? மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன? மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள் :-)

 

Published in Books

அவன் காதில் விழும்! - ரவை

ரவை'யின் பத்து முத்தான சமுக நலக் சிறுகதைகளின் தொகுப்பு.

Published in Books

ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

இதுவரை காதலை மையப்படுத்தி அதனுடன் இணைந்த குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கூறினேன். இந்த கதையில் காதல் என்பது இருக்கும். ஆனால் அதை நான் மையப்படுத்தவில்லை.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ (தமிழில் இரண்டு படங்கள் இருப்பதால் நடிகர்களை குறிப்பிட்டுள்ளேன்) படத்தில் வரும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ என்ற பாடல் சகோதரர்களின் பாசத்தை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும். நான் சொன்ன அந்த வரி எனக்கு பிடித்திருந்தது.

அதனால் நான் சகோதரிகளைப் பற்றி சொல்லப்போகும் இந்தக் கதையின் தலைப்பை ‘ஒரு கூட்டுக் கிளிகள்’ என்று வைத்திருக்கிறேன்.

அந்த சகோதரிகள் உங்களை கதையில் சந்திக்க வருகிறார்கள்.

நன்றி!

Published in Books

You And Me - Sandhya

A sweet and soft South Indian romantic fiction.

 

Thulasi - A young woman with self-esteem and self-respect.

She adores her mom and sister.

 

Dinakaran - A good man but filled with prejudice towards women.

He is also closer to his mom.

 

Thulasi and Dinakaran's first meeting doesn't go too well.

But their subsequent meetings does create a soft corner for the other in their heart.

Can they come out of the rift created by their first meeting and live happily ever after???

 

Read the story and find it.

Published in Books

நீ தான் என் சந்தோசம் - ராசு

ராசுவின் கைவண்ணத்தில் இன்னுமொரு அழகிய குடும்ப - காதல் கதை.

Published in Books