முன்னுரை
பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.
ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.
தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு… பெற்றோர் யார் என்றே தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.
அவளிடம் அக்கரை கொள்ளும் அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…
இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.
ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??
இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!
இது ஒரு எளிய, இனிய காதல் கதை!
நித்திலா… பெற்றோரை இழந்திருந்தாலும்… தாத்தாவின் அரவணைப்பில் தாய்வழி உறவுகளின் அன்பில் வளர்ந்தவள். உறவுகளின் அருகாமையையும் அருமையையும் போற்றுபவள்.
சக்திமித்ரன் பெற்றோர் இருந்தும் காலத்தின் கோலத்தால் தனித்து விடப்பட்டவன். உறவுகளில் உண்மை இல்லை என்று நினைப்பவன்.
சக்திமித்ரன்… நித்திலா இருவரும் காதலித்து திருமணத்தில் இணைந்து பின் பிரிந்து விடுகிறார்கள். பின்னாளில் மனைவியின் நிலை புரிந்து அவனுடைய தவறான முடிவுகளால் நித்திலா இழந்த இனிமையான உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறான்.
உறவுகளின் மேன்மை புரிந்து யாருடைய குறுக்கீடும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி அவன் அவளுக்காக அனைத்து உறவுகளையும் சேர்த்து மாலையாக கோர்த்தெடுக்கப்போகிறான். அந்த முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?
அன்புடன்
சாகம்பரி