Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 23

Story Name - Vannam konda vennilave vaanam vittu vaaraayo

Author Name - Sasirekha

Debut writer - No


வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா

முன்னுரை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் காதலும் பாசமும் அளவுக்கு மீறி அதிகமானால் விளைவுகள் என்னாகும் என்பதே இக்கதையின் கருவாகும்.

அக்கா மேல் கொண்ட பாசத்தால் தங்கைக்கும் காதலி மேல் கொண்ட காதலால் காதலனுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையாகும்.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 22

Story Name - Naan avalil paripooranam

Author Name - Sri

Debut writer - No


நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ

வாசகர்களுக்கு வணக்கம்,

சில்சீக்கு நான் புதுமுகம் அல்ல.எனினும் சக வாசகர்களுக்கான என்னுடைய அறிமுகத்திற்காகவே இந்த முன்னோட்டம்.

2016 இல் சில்சியில் தொடங்கிய என்னுடைய எழுத்துப் பயணம் கடவுளின் அருளால் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போட்டிக்கான எனது படைப்பான "நான் அவளில் பரிபூரணம்",என்னுடைய பதினெட்டாவது கதை. கொரானா,ஊரடங்கு என நிலைமையே தலைகீழாய் மாறிவிட்டிருக்கும் நிலையில் என்னால் இதை முடிக்க முடியுமா என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.

எனினும் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போட்டிகளில் பங்கு கொண்டு,இப்போது தாய் வீட்டின் நிகழ்ச்சியில் என்னுடைய பங்கு இல்லாமல் இருப்பதை மனம் ஏற்க மறுத்த ஒரே காரணத்தினால் கடைசி நிமிடத்தில் முடித்து அனுப்பியிருக்கிறேன்.

கதையைப் பற்றிக் கூற வேண்டும் எனில்,பொதுவாய் போட்டி என்றவுடன் சமூக நெறிக் கதைகளோ அல்லது எதாவது வித்தியாசனமான கதைக் களத்தையோ எடுத்து எழுதுவது தான் வழக்கம்.இருந்தும் இந்த முறை காதலை மையமாகக் கொண்டே எழுதியிருக்கிறேன்.

எப்போதுமே சமூகத்தின் மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தும்,உறவுகளில் இருந்தும் மட்டுமே ஏற்பட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படியான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கதை.

இந்த வாய்ப்பினை அளித்த சில்சி குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்,
ஸ்ரீ.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 21

Story Name - En mel undranukkethanai anbadi

Author Name - Sasirekha

Debut writer - No


என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா

முன்னுரை

தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

Chillzee Reviews

Check out the En mel undranukkethanai anbadi story reviews from our readers.

  

 

Published in Books

கண்ணுக்குள் நீயடி - ராசு 

அனைவருக்கும் வணக்கம்.

காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.

பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.

அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 20

Story Name - Enaiyaalum kadhal desam nee thaan

Author Name - Sasirekha

Debut writer - No


எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா

முன்னுரை

நாயகனை கண்ட ஒரு நொடியில் காதல் வயப்படும் நாயகி அவனை தேடி சென்று தன் காதலை அவன்மீது பொழிகிறாள். இதில் நாயகனின் காதலுக்காக ஏங்கும் நாயகிக்கு அவளின் காதல் கிடைத்ததா என்பதே இக்கதையின் கருவாகும்.

Published in Books