காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.
இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
வெற்றி'யின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
இந்தக் கதை,
தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,
‘எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்
சமர்ப்பணம்!!!!
இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!
கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,
கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.
அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.
கடல் நிலவு என்ற இந்த நாவல் பல தளங்களிலும் பயணிக்கும் ஒரு சுவாரசியமான கதை. இன்றைய மாடர்ன் இளைஞர்களான அஸ்வின், மதன், ராகவ் என்பவர்கள் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயலும் போது முன் பின் தெரியாத ஒரு பெரியவர் அவர்களைக் கடல் பயணம் மேற்கொள்ள சொல்கிறார். அவர்களும் சொகுசுக் கப்பலில் அந்தமான் தீவுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தமான் சென்றார்களா? நடுக்கடலில் அவர்களுக்கு என்ன ஆனது? கற்பகத்தீவு என்பது என்ன? அங்கே அவர்களுக்கு ஏற்படும் பல விசித்திர சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. மீனாம்பிகை, முத்தழகி மற்றும் சங்கு புஷ்பம் என்ற மூன்று இளம் பெண்கள் இவர்களோடு நெருக்கமாகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் தானா? மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா? இறுதியில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது? அதைப் பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது கதை. ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை பதட்டம் கொள்ள வைக்கும். மிகவும் விறுவிறுப்பான நாவல் இது.
ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.
[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார் (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.
இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??