தெரியுமா உங்களுக்கு???
உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு எது?
ஒரு விமான நிறுவனம் ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்யும் காரணம் என்ன?
ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்?
வாழைப்பழங்கள் ஏன் வளைந்திருக்கிறது?
ரூட்டின் வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆக, படியுங்கள், தெரிந்துக் கொள்ளுங்கள், ஸ்மைல் செய்யுங்கள்!
முன்னுரை
தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
Check out the En mel undranukkethanai anbadi story reviews from our readers.
முன்னுரை:
வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம்.
படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை” .
முதல் பகுதியில் சந்தர்ப்பவசத்தால் அவர்களின் காதல் இருவரும் சொல்வதற்குள் பிரிந்து விட்டது போல் அமைந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் காதலை ஒத்துக் கொண்டு காதலித்து இருந்தால் அவர்களின் கல்லூரிக்காலம் எப்படி இருந்திருக்கும் என்பதே இந்த இரண்டாவது பாகம்.
கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
என்னுடைய இந்த முதல் நாவலை மறைந்த எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
குருவே நின் திருவடி சரணம்!!!
- விஜயகுமாரன்
திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக விஜயகுமாரன் பகிர்ந்திருக்கும் நாவல்.