Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

நீ தானா...??? - பிந்து வினோத்

Second edition.

 

சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.

இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

 

Published in Books

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - சசிரேகா

முன்னுரை

காதலிக்க நேரமில்லாமல் இருக்கும் கதாநாயகியும், காதலிக்க யாரும் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகனும், விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதேச்சையாக நேரில் சந்தித்த போது, அவர்களுக்குள் தோன்றிய காதலை வெற்றி பெற வைத்தார்களா இல்லையா என்பதே கதையின் கருவாகும். 

 

Published in Books

ஜனவரி டூ டிசம்பர் - சசிரேகா

ஜனவரி டூ டிசம்பர் வரையிலான பன்னிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பு!

 

Published in Books

கமகமக்கும் சுவையான உணவுகள்! - நந்தினி.S

சுவையான சமையலுக்கான குறிப்புகள்!

 

Published in Books

பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசக தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம் !. எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!

நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி  காட்டும் தூய்மையான அன்புதான்.  காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.

நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.

நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.

இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும்  இவர்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிபட்ட நட்பில்,  ஈருடல் ஓருயிராக பழகிய இருவரின் நட்பில் விரிசல் வந்தால்? அது எப்படி அவர்களை பாதிக்கும்? அந்த விரிசலில் சிக்கி கொண்ட  இரு பெண்களின் வாழ்க்கை  என்ன ஆனது?. ஒருமுறை விழுந்த விரிசல் மீண்டும் சரியாகுமா? சொல்ல வந்திருக்கிறேன் பெண் ஒன்று கண்டேன் பயணத்தின் மூலமாக.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான நட்பு+ காதல் கலந்த ஜாலியான கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books