Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

என் இதயம் கவர்ந்த தாமரையே - சசிரேகா

முன்னுரை:

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.

நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.

Published in Books

கண்ணுக்குள் நீயடி - ராசு 

அனைவருக்கும் வணக்கம்.

காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.

பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.

அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு

Published in Books

தேடும் கண் பார்வை தவிக்க... - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்.. Chillzee ன் வாசகியாக இருந்த நான் ஆர்வக் கோளாறில் பொழுது போக்கிற்காக விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது..

எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் எனக்குள்ளே நிறைய மாற்றங்கள்.. வாழ்க்கையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள என் எழுத்தும் உதவியிருக்கிறது என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..

அறிமுக எழுத்தாளராக Chillzee உள்ளே நுழைந்த எனக்கு என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும்  Chillzee ல் வெளியான எனது ஆறு கதைகளும் KiMo ல் நேரடியாக வெளிவந்த எனது மூன்று நாவல்களும் சேர்த்து பார்த்தால் நான் இப்பொழுது எழுதுவது எனது பத்தாவது கதை..

When I realize that, I said myself WOW.. ?..

என்னாலும் பத்து கதைகளை எழுத முடிந்தது என்று எண்ணும்பொழுது எனக்கே  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான உங்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்..

கதையைப் பற்றி??

கதையின் தலைப்பிலிருந்து ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்..ஆம்... நம் பயணத்தின்  நாயகன் எதையோ தொலைத்து விட்டு தேட போகிறான்..அவன் தேடுவது அவனுக்கு கிடைக்குமா?  என்று அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

எனது பத்தாவது கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!

********

Published in Books

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - உன்னை கண் தேடுதே...! - Chillzee Originals

சமர்ப்பணம்:

பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!

 

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி

முன்னுரை

பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு…  பெற்றோர் யார் என்றே  தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

அவளிடம் அக்கரை கொள்ளும்  அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Published in Books