ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு செட்டிங்கில் எழுதுவது பெரிய சவால் தான்... ஆனால் அந்த சவால் தான் எழுதும் செயல்முறையை எனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டிங் ஆக்குவதும் கூட!!! :-)
அப்படி யோசித்து, நான் முன்பு விளையாடிய ஒரு வுமன்ஸ் கிரிக்கெட் லீக் அனுபவத்தை வைத்து எழுதிய ‘கற்பனை’ காதல் கதை தான் இந்தக் கதை!
இது ஒரு ஜாலி கோ ரவுன்ட் கதை :-) ஸ்வரூப் & மதுவின் காதல் கதையை சொல்லும் கதை!
ரொம்ப லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... :-) ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரின்னு நினைச்சுப் படிங்க :-)
இது 'உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்...' நாவலின் இரண்டாம் பதிப்பு.
முதல் பதிப்பில் இருந்து பல விதமான மாற்றங்கள் மற்றும் பல பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி!!
கதையைப் பற்றி:
மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.
சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.
சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.
ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??
தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!
ஹாய் ஃபிரென்ட்ஸ், 'உன்னைத் தானே' கதையுடைய ஒரிஜினல் எடிஷன் இது. இந்த வெர்ஷனுக்கும், "உன்னைத் தானே" வெர்ஷனுக்கும் சின்னதாக சில வித்தியாசங்கள் இருக்கிறது. என் பிரென்ட்ஸ் சிலருக்கு இந்த வெர்ஷன் பிடிக்கும். அதற்காக இதையும் பப்ளிஷ் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் "உன்னைத் தானே" கதையை படித்திருந்தால், என்ன வித்தியாசம் என்று தெரிந்துக் கொள்ள படியுங்கள், அல்லது ஸ்கிப் செய்து விடுங்கள் :-) நன்றி!
கதையைப் பற்றி:
கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.
சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.
ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?