தன்னலம் இல்லாமல் நாட்டின் எல்லையை பாதுகாத்து, நெருக்கடி நிலையில் உதவி ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து நம் அனைவரையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும்,
மகன், கணவன், சகோதரன் என இனிய உறவுகளை நம்மை பாதுகாக்கும் பணியில் இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும் இந்த கதை அர்ப்பணம்!
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் விஷ்ணுவும், கதாநாயகி மீராவும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
மீரா விஷ்ணுவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
விஷ்ணுவோ மீராவைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
கதையைப் பற்றி:
இது ஒரு சிம்பிள் லவ் story :-)
நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...
அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)
Things we lose have a way of coming back to us in the end...!
ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்