Online Books / Novels Tagged : OKR - Chillzee KiMo

காதலென்னும் பொன்னூஞ்சல்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தீபா என்ற இளம் பெண்ணைச் சுற்றி நெய்யப்பட்டுள்ளது இந்த நாவல். அவளது மன உணர்வுகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் அவளது காதலைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது காதலென்னும் பொன்னூஞ்சல் நாவல். இன்னமும் நம் நாட்டில் பல பெண்களுக்கு இரக்கம், அனுதாபம் போன்ற உணர்வுகளே காதலின் அடிப்படையாக அமைகின்றன. ஆனால் அவை உண்மையான காதலாகுமா?

காதலிலும் விட்டுக்கொடுத்தல் வேண்டும் தான். ஆனால் சுயகௌரவமே இல்லாத அளவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தால் என்ன செய்ய?  கதிரின் நடவடிக்கைகள் பிடிக்கவேயில்லை என்றாலும் பொறுத்துப் போகும் படி சொல்கிறது அவளது மனசாட்சி. ஆனால் அதே நேரத்தில் இன்னொருவனோடு இருக்கும் போது சுதந்திரமாகவும் சௌகரியமாகவும் உணர்கிறாள் தீபா. இது என்ன மாதிரியான உணர்வு? கதிர் சரியில்லை என வேறொருவனிடம் காதல் கொள்கிறோமோ? இது சரியா? தான் தவறிழைக்கிறோமோ? என பலப்பல குழப்பங்களின் சிக்கித் தவிக்கிறாள் நம் கதாநாயகி தீபா. அவளது தோழி அனிதா பக்க பலமாக இருக்கிறாள். இறுதியில் தீபா என்ன முடிவு எடுக்கிறாள்?

படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் வாசகர்களே! இதோ உங்களுக்காக "காதலென்னும் பொன்னூஞ்சல்".

Published in Books

வானவில்லே! வண்ண மலரே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.

நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!

Published in Books

காற்றில் வரைந்த ஓவியம் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

காற்றில் வரைந்த ஓவியம் என்ற இந்த நாவல் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றும் ஆண்களையும் பெண்களையும் பற்றியது.

கிராமத்தில் வெளி உலகம் அறியாமல் வாழும் இரு ஜீவன்கள் எப்படி ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது.

நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் அந்த நம்பிக்கை தன் மீது, தன் திறமைகள் மீதான தன்னம்பிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி வேறோருவனை முற்றிலுமாக நம்பி விடக் கூடாது எனச் சொல்கிறது காற்றில் வரைந்த ஓவியம் நாவல்.

கோமதி ஏமாற்றப்பட்டாள். அவளது கணவன் கூற்றுப்படி அவளை கெடுத்து பிள்ளையும் கொடுத்து நட்டாற்றில் விடவில்லை அவன். தாலி கட்டிக் குடும்பம் நடத்தினான் தான். ஆனால்? அவன் எப்படிப்பட்டவன்? எப்படிப் பட்ட துரோகங்களைச் செய்தான்? அவனால் கோமதியின் எதிர்காலமே கேள்விக்குறியாக ஆனதே? ஆனாலும் கோமதியும் அவள் தாய் கல்யாணியும் மனம் தளரவில்லை. கடவுள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.

கோமதியின் வாழ்வு என்ன ஆனது? அவளது எதிர்காலம் வளமாக ஆனதா? கோமதியின் கணவன் ராகவன் என்ன ஆனான்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தான் இந்த நாவல்.

படியுங்கள் வாசகர்களே!

படித்து விட்டுக் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Published in Books

ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

ஊரெங்கும் பூ வாசம் என்ற இந்த நாவல் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்மணியின் சொந்த அனுபவங்கள்.

இக்கதையின் நாயகியான வடிவு ஆச்சி சாதாரண காய்கறி விற்கும் பெண்மணி. வாழ்க்கையில் பல துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தவள். அவளுக்குத் துன்பங்களைக் கொடுத்தவர்கள் சொந்தக் கணவன், மகன் என்றான போதிலும் அவள் மனம் தளரவில்லை. மகள் அர்ச்சனாவை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற அவளது கனவிலிருந்தும் பின் வாங்கவில்லை. "என்னை விட்டுப் பிரியும் போது ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் தானே இருந்தது. அவன் என் மகன் தினேஷ். ஆனால் இப்போது இப்போது மகள் ஒருத்தி இருக்கிறாளே? அவளை யாருக்குப் பெற்றாய்? என்ற கணவனின் கேள்வியால் உள்ளம் புண் பட்டாலும் உண்மையான பதிலைச் சொல்லவில்லை ஆச்சி.

அர்ச்சனா உண்மையிலேயே யார்? அவளுக்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விகள் வருகின்றன இந்தக் கதையில்.

மனிதாபிமானம், இரக்கம், கருணை அதே நேரத்தில் தைரியம், துணிச்சல் இவைகளின் மொத்த உருவம் தான் ஆச்சியும், அர்ச்சனாவும். குடும்பக் கதைகளைக் கூட இத்தனை விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? என பலரையும் வியக்க வைத்தது இந்த நாவல்.

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்களேன் வாசகர்களே!

Published in Books

தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

பெரிய குடும்பத்தில் பிறக்கும் கடைசி மகன்கள் ஒன்று சிறு குழந்தை என்று ஒதுக்கப்படுவார்கள் அல்லது மிக அதிக செல்லம் கொடுத்துக் கெடுக்கப்படுவார்கள். இங்கே நமது நாயகன் செந்தில் குமரன் பாவம் ஒதுக்கப்படுகிறான். அவனை தகப்பனே மதிக்கவில்லை எனில் உடன் பிறந்த அண்ணன்கள் எங்கே மதிப்பார்கள்? அவர்களது மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் பாவம் செந்திலுக்கு தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதோ, தனக்குப் பெரிய மரியாதை இல்லை குடும்பத்தில் என்பதோ தெரியவில்லை அவன் வாழ்க்கையில் பெண் என ஒருத்தி வரும் வரையில். அவளும் தகப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அதுவும் எதற்கு? பழி வாங்க. இது எதுவும் செந்திலுக்குத் தெரியாது. சந்தோஷமாக ஆரம்பிக்கும் அவன் மண வாழ்க்கையில் பல சூறாவளிகள், சதிகள். தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை. இறுதியில் என்ன ஆனது?

சிவகுர் எனப்படும் பண முதலை தன் கடைசி மகனின் திறமைகளை, அவன் ஆசைகளைப் புரிந்து கொண்டாரா? பெண்களும் மனிதப்பிறவிகள் தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், சாதிக்கும் ஆசை எல்லாம் இருக்கும் என உணர்ந்தாரா? அப்படியே உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டதோ?

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் "தேடி உன்னைச் சரணடைந்தேன்"

Published in Books